BCCI:பிசிசிஐயில் அரசியல் தலையீடு உள்ளதா? கிரண் ரிஜிஜூ விளக்கம்

சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் தேர்வு நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும் நடப்பதாக கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். மேலும் வீரர்களின் பயிற்சி, போக்குவரத்து, மற்றும் பிர செலவுகள் அனைத்துமே அரசு ஏற்றுக்கொள்கிறது என்றும் தெரிவித்தார்.


கேள்வி நேரம்
லோக்சபாவில் நடந்த கேள்வி நேரத்தில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,“ வீரர்களின் தேர்வு மிகவும் நேர்மையான முறையில் வெளிப்படையாக நடக்கிறது.

 

இதில் விளையாட்டு கூட்டமைப்புகள் முரண்பட்டால், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு உட்பட அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளும் அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கும் விதத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

மேலும் வீரர்களுக்கு பல விதத்தில் உதவி வருகிறது.” என்றார்.

கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு...
இதேபோல இந்திய கிரிக்கெட்டில் உள்ள மிகப்பெரிய அரசியல் தலையீடு குறித்து அரசுக்கு தெரியுமா? அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்கான காரணம் என்ன? பிசிசிஐயில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் விவரங்கள் என்ன? மற்றும் இந்திய கிரிக்கெட்டில் அரசியல் தலையீட்டை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.